Wednesday, February 28, 2007

இஸ்லாமிய விமர்சனங்களின் இணையத் தாக்கம்

கூகிளில் முயன்றவை:

இஸ்லாம் என்று தமிழில் உள்ளிட்டால் முதல்பக்கத்திலேயே ஐந்தாவது லிங்காக எனது இஸ்லாமிகின்ஃபோ பதிவு வருகிறது. முதல் பக்கத்தில் வந்துள்ள பதிவுகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பதிவுகளில் எனது தாக்கம் இருக்கிறது.

இஸ்லாம்+இந்து+கிறித்துவம் என்று கூகிளிட்டால் முதல்பக்கத்திலேயே எனது இஸ்லாமிகின்ஃபோ பதிவு வருகிறது. முதல் பதிவாக தருமி அவர்களின் பதிவு வருகிறது.

தீவிரவாதம் என்று கூகிளிட்டால், முதல் பக்கத்தில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் இஸ்லாம் பற்றிய விஷயங்களே வருகின்றன. இதில் ஜடாயு அவர்கள் எழுதியிருப்பது, எனக்கு அபூ முஹை அவர்கள் பதிலளித்திருப்பது போன்றவையும் அடங்கும்.

இஸ்லாம்+வன்முறை என்று கூகிளிட்டால், முதல் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 40% எனது பதிவுகளோ அல்லது எனக்கு பதில் தருகிறேன் என்று எழுதியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகளோ வந்து விழுகின்றன.

இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூகிளிட்டால், முதல்பக்கத்திலேயே கால்கரி சிவா, ஜடாயு போன்றவர்கள் எழுதியுள்ளது மற்றும் வேறு பலரும் செய்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த விமர்சனங்கள் வருகின்றன.

நபிகள் நாயகம் என்று கூகிளிட்டால் இரண்டாவது பக்கத்திலேயே எனது பழைய பதிவான islaam.blogdrive.com வந்து விடுகிறது. மேலும், எனக்கு பதில் சொல்லும் இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகளும் வந்துவிடுகின்றன.

முகமது என்று கூகிளிட்டால், முதல் பக்கத்திலேயே கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் எனது பதிவுகள், விவாதங்கள் வந்துவிடுகின்றன.

பர்தா என்று கூகிளிட்டாலும் முதற்பக்கத்திலேயே எனது, எனக்கு பதிலளித்திருப்போரின் பதிவுகள் வந்து விடுகின்றன.

இஸ்லாம்+பெண்ணடிமை என்று கூகிளிட்டால், முதல் பக்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எனது அல்லது எனக்கு பதிலளித்திருப்போரின் பதிவுகளே. நண்பர் ஆரோக்கியம் அவர்களின் பதிவும் முதல் பக்கத்திலேயே வருகிறது.

இஸ்லாம்+காட்டுமிராண்டித்தனம் என்று கூகிளிட்டால், முதல் பக்கத்திலேயே எனது பதிவுகள், மயூரனின் பதிவு, எனக்கு பதிலளித்து எழுதியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகள், நண்பர் வஜ்ரா சங்கரின் பதிவு போன்றவை வருகின்றன.

இஸ்லாம்+பிற்போக்கு என்று கூகிளிட்டால் முதல் பதிவாக நண்பர் சிவா என்னை விமர்சித்து எழுதியது வருகிறது. நண்பர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பதிவும் வருகின்றது.

மெக்கா என்று கூகிளிட்டால் நான் வஹி பற்றி எழுதியவையும், எனது புதிய பதிவான நேசமுடன் பதிவும் வருகின்றன. நண்பர் ஆரோக்கியம் அவர்களின் என்னமோபோ பதிவும் வருகிறது.

மதீனா என்று கூகிளிட்டால் எனது நேசமுடன் பதிவும், திண்ணையில் நான் எழுதியவையும் வருகின்றன. எனக்கு பதிலளித்து எழுத ஆரம்பித்த சகோதரர் அபூ முஹை அவர்களின் பதிவும் வருகின்றது.

இஸ்லாமிய கொடூரங்கள் என்று கூகிளிட்டால் நண்பர் எழிலின் பதிவு முதல் பக்கத்திலேயே வருகின்றது. வழக்கம் போல, நமது இணைய விவாதப் பதிவுகள் இங்கேயும் வருகின்றன.

Nesakumar என்று ஆங்கிலத்தில் கூகிளிட்டால், 70% எனது விஷயங்களே வருகின்றன. அனைத்தும் இஸ்லாம் சம்பந்தப்பட்டவை என்று சொல்லவும் வேண்டுமா?

நேசகுமார் என்று தமிழில் கூகிளிட்டால் 90% எனது , என் மீதான விமர்சனங்கள் குறித்த எழுத்துக்களே வருகின்றன. இவற்றுள் 90% நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாம் சம்பந்தப்பட்டவை.


***

இது கூகிள் தேடல் மட்டும்தான். மற்றபடி இன்று தமிழிலக்கிய உலகில் பலர் என்னை மேற்கோளிட்டு பேசுவதாக நண்பர்கள் கூறுகின்றனர். ஜெயமோகன் ஒரு முறை தாம் செல்லும் இடங்களில் எல்லாம் நேசகுமாரா நீங்கள் என்ற கேள்வி எழுகிறது என்றார். தமிழகத்தின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், "நேசகுமார் என்ன முன்னாள் முல்லாவா?" என்று நண்பர் ஒருவரிடம் கேட்டாராம். தமிழகத்தின் முன்னோடி இலக்கியப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரும், "யாரிந்த நேசகுமார்? அவர் இஸ்லாம் பற்றி எழுதுவது நன்றாக இருக்கிறது. ஆனால், முன்பிருந்தது போன்ற மென்மை இப்போது இல்லாமல் போய்விட்டது" என்றாராம். பிரபல தமிழ் வாரப்பத்திரிகையில் பணிபுரியும் ஒருவர் எனது எழுத்துக்களைப் படித்து ரசித்தேன் என்று பதிப்பாள நண்பர் ஒருவரிடம் சொல்லியுள்ளார்.

இதெல்லாம் சுயபெருமைக்காக எழுதவில்லை. யாராவது ஒருவர், கொஞ்சம் நேரம் செலவழித்து முயன்றால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது பாருங்கள். என்னை மேன்மேலும் எழுதத் தூண்டியவை இரண்டு மின்மடல்கள். ஒன்று சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தது. இரண்டாவது கத்தாரிலிருந்து வந்திருந்தது. இரண்டுமே என்னை மிரட்டின, இஸ்லாமிய பாணியில். ஒரு மடல் இந்து மதத்தை திட்டி வந்திருந்தது. எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். அதில் ஒருவரின் விபரங்கள், புகைப்படம் முதற்கொண்டு சேகரித்து வைத்துள்ளேன்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களின் தீவிரவாதச் செயலால் உலகம் மருண்டுவிடும் என்று எண்ணுகின்றனர். அமைதியாய் தானுண்டு தன் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருக்கும் சாமான்யர்கள் சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டால் கூட இஸ்லாமிய தீவிரவாதம் தவிடு பொடியாகிவிடும் என்பதை அவர்கள் உணரவில்லை.

கோவையில் குண்டு வைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினரின் நிலை இன்று என்ன என்பது தெரியாதா? வீராப்பாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு தம்மையும், தமது குடும்பத்தாரையும் இவர்களே இழிவு படுத்திக் கொண்டார்கள். இன்று காஃபிர்களின் காலைப்பிடிக்காத குறையாய் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக்கொண்டுள்ளார்கள். இவர்களின் குழும்பத்தார்களின் நிலையோ இன்னமும் பரிதாபம்.

இந்நிலையில், அடிக்கடி வலைப்பதிவுகளில் சொல்வது போல, 'சொந்தச் செலவில் முழு சமுதாயத்துக்கே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்' இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்.


இவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே ஒரு காஃபிர் வைத்தியர்தான் இவர்களைக் கவனிக்க வேண்டும். இவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால் காஃபிர் ஆசிரியர்களிடம் தான் போகவேண்டும். வெளிநாடுகளில் குடும்பத்தை விட்டுவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் குடும்பத்தாருக்கு உறுதுணையாக அங்கே இருப்பது காஃபிர்கள் தாம்.

இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை, அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் இதே நிலைதான். உதாரணமாக பக்கத்திலிருக்கும் பாகிஸ்தானில் இன்று அமெரிக்க, சீன வழிநடத்துதல் இல்லையென்றால் நாடே உடைந்து கற்காலத்துக்கு போகவேண்டும் என்ற நிலை( அமெரிக்கா குண்டு போட்டு கற்காலத்துக்கு அவர்களைக் கொண்டுபோகத்தேவையில்லை).

முன்னேற்றத்தை தடுக்கத்தான் இவர்களால் முடியுமே தவிர, முன்னேற்றத்தை சுயமாகச் செய்து கொள்ள இவர்களால் முடியாது. முன்னேறிய இஸ்லாமிய நாடுகள் என்று நாம் கருதும் இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே காஃபிர்களின் தயவால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு மலேசியா, அங்கே சீனர்கள் இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். அமெரிக்கா தன்னுடைய கையை பின்னே இழுத்துக்கொண்டால் சவுதி உடனடியாக உடைந்து சிதறி ஆஃப்கானிஸ்தான் போன்றாகிவிடும்( அமெரிக்கா அதை இப்போதைக்கு செய்யாது என்பது வேறு விஷயம், வேலையே செய்யாமல் இப்போது பொருளீட்டிக் கொண்டிருக்கிறது அது சவுதி மூலமாக).

சவுதியோ வெளியில் வீராப்பாக பேசினாலும், தனியறையில் அமெரிக்க, யூத தலைவர்களின் முன்பு மண்டியிட்டு விழாத குறை. சவுதி அரச குடும்பத்தின் முதலீடுகள் எல்லாம் மேலை நாடுகளில் முடங்கிக் கிடக்கின்றன.


***



இந்த நிலையில் மீண்டும் மீண்டும் மிரட்டல்களையும் வீராப்பு வசனங்களையும், தத்து பித்தென்று கவிதைகளையும் எழுதி வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கண்டு சிரிப்பே வருகிறது.


நான் இப்போது படித்து வரும் லெகசி ஆஃப் இஸ்லாம் நூலில் ஒரு விஷயத்தைக் காண்கிறேன். இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தைச் செய்தவர்கள் எல்லோருடைய குடும்பங்களும் சந்ததியே இல்லாமல் அழிந்து போயின. இஸ்லாமாவது தழைத்ததா என்றால் இல்லை. இஸ்லாம் இங்கே உருமாறிப்போய், இந்து மதத்தின் இன்னொரு பிரிவு என்று சொல்லும் வகையில் நசிந்து போய், இன்னமும் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு சவாலாக இருந்து வருகின்றது. மேலும் , எண்ணிக்கையின் பலத்தால் இந்த இந்துமயமான இஸ்லாம் உலக இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வீழ்த்தி வருகின்றது. ஆம், இவர்கள் மாற்றினேன் என்று நினைத்த இந்துக்களெல்லாம், இஸ்லாத்துக்குள் சென்று இஸ்லாத்தையே உருமாற்றி அழித்தார்கள். மேலுக்கு இஸ்லாம் போன்று தோன்றும் இந்த(இந்து) இஸ்லாம் இன்று ஒரிஜினல் இஸ்லாத்தினுள்ளே பலவிதங்களில் ஊடுருவி, சுற்றி வளைத்து முடக்கிப் போட்டுள்ளது என்பதை இவர்கள் உணரவில்லை, பாவம். இஸ்லாத்தை வெளியிருந்து நோக்கும் எனக்குப் புலப்படும் இந்த சிறிய விஷயம் கூட இவர்களுக்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம். அவர்களே அவர்களை அழித்துக் கொள்வது கூடத் தெரியாத அளவுக்கு மூடத்தனமும் , மூர்க்கமும் இவர்களது கண்களை மறைத்துவிட்டிருக்கிறது.


இப்படி அவர்களும் அழிந்து அவர்கள் சாதித்ததாக நினைத்ததும் அழிந்து போனதுதான் இந்த தீவிரவாதிகள் செய்த சாதனை. இதே விஷயம் மீண்டும் மீண்டும் உலகெங்கும் நடக்கின்றது.
ஈராக்கில் நான்கு லட்சம் பேச் செத்தார்கள், ஆஃப்கானிஸ்தானின் மூன்று லட்சம் பேர் செத்தார்கள் என்று அடுக்கும் அதே நபர், இப்படி அப்பாவி இஸ்லாமியர்கள் சாகக் காரணமாயிருந்தவர்களின் அதே பாணியை பின்பற்றுவதுதான் விந்தையிலும் விந்தை.

Stumble Upon Toolbar

3 comments:

Anonymous said...

http://www.islamundressed.com/

padichchu parunga unga aaraycchikku mElum uthavum

Anonymous said...

அய்யா, சற்று அடக்கி வாசிக்கவும். இப்பதான் தோழர் ஆரூரன் பதிவைத் தூக்கி விட்டதைப் பார்த்தேன். அவர் செய்த ஒரே தவறு ஈழத்தமிழனாய் இருந்து கொண்டு தன்னை இந்து என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டது. இங்கே சிலர் ****பையா என்றால் கூட சிரித்துவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் இந்து என்றால் ஆத்திரப்படுவார்கள்.

Anonymous said...

பாரதியை வைத்து இந்துமதத்தைத் தாக்க ஆசைப்பட்ட நல்லடியார் இங்கே சொசெசூ வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆத்தி சூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்
கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே"

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;உய்வ தனைத்திலும்
ஒன்றாய் - எங்கும்ஓர்பொருளானது தெய்வம்"

"யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்"

என்று முஹம்மது நபி வலியுறுத்திய "லாஇலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ இறைக் கொள்கையைத்தான் பாரதியும் "பாருக்குள்ளே தெய்வம் ஒன்றே" என வழிமொழிந்துள்ளார்.


இப்படி எழுதி அல்லாவிற்கு இணைவைத்த பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருக்கும் நல்லடியாரை அந்த ஏக இறைவன் மன்னிப்பானாக!