.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

புதன், 1 ஜூன், 2011

உயிர்க்குள் முளைத்தவை..

Wednesday, 18 June 2008

உயிர்குள் முளைத்தவை...

என்னைத் துளைத்து எனக்குள் விதைத்து உயிர்குள் முளைத்தவை...
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள்பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ??? -பாரதியார்
பொது நலத்துக்கு உழைக்கும் அறிஞர்களை தன்னலத்துக்கு உழைப்பவர்கள் விரைவில் வென்று விடுவார்கள். முன்னது - ஆற்றின் ஊற்று நீர் போன்றது. பின்னது - காட்டாற்றில் பெருகி வரும் வெள்ளம் போன்றது.
- -கி.ஆ.பெ.விசுவநாதம்.
----
குறள்
49.காலம் அறிதல்
'ஞாலங் கருதினுங் கைகூடும் - காலம்
கருதி இடத்தாற் செயின் -484.
'காலங் கருதி இருப்பர் - கலங்காது
ஞாலங் கருது பவர்' -485
74. நாடு
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் - ஏமம்
அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து' -738
ஈசன் மொழிகள்

'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'

'எழுத்துயர படைப்பு உயரும்

படைப்புயர சமூகம் உயரும்'

-------
ஒருமுறை..
ஒன்று சொல்வேன்.
ஒரு முறை மலரும் மலர் போல்
மொட்டவிழும் ஒருமுறை பெண்மை.
தொட்டவிழும் ஒருமுறை தாய்மை.
கண்கள் பேசியோ? பேசாமலோ?
காதல் ஒரு முறை
.24.12.02
--------
'எல்லாத் தரப்பினரும்
நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால் உலகே உயர்ந்துவிடும்.'
---------
'பிறப்பின் மகிமை புனிதமானது
என்பதை நிரூபித்திட்ட நன்நாளை நினைத்து
நாமெல்லாம் மகிழ்ந்திருப்போம்.'
-------
அமைதியை நாடும் மனம்
ஆறுதல் தேடும் இடம்
ஏதோ மனிதச் சத்தங்கள் பொறுக்கும்.
23.09.00
---
தவறியவை தவறியவையே!
தடுமாற்றம் என்பது இருந்துவிட்டால்
தவறுதலுக்கு தப்ப முடிவதில்லை.
தப்புதல் என்பது?
தப்பாகாது எனச் சொல்வதற்கு இல்லை.
13.09.00
-----
காதல் மொழி.
சின்ன சின்ன பார்வைகள் போதும்
சிரித்த கண்கள் பூசுதல் போதும்
எந்தன் மனதை திருடிக்கொண்டதுமில்லாமல்
இல்லை என்று பொய்யும் சொல்வது
பெண்மையின் உண்மையோ?
000000000

கருத்துகள் இல்லை: