.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து.

1.
வாராய்! வாராய்!
வாசல் தேடிபாலா அண்ணலே!
உள்ளம் உருகி நோகுதே!
உயிரும் வருந்தி பாடுதே!
பாடும் பாடல் கேட்குதா? (வாராய்!)

ஈழம் என்னும் மூச்சிலும்
அறிவு கொண்ட பேச்சிலும்
அன்பில் என்றும் வாழ்ந்திடும் உள்ளம் நீரே பாலா!
உலக அரங்க காற்றிலும்
ஈழத் தமிழர் வீட்டிலும்
உந்தன் குரலே கேட்டதே! மறக்குமோ பாலா?
பல அர்த்தம் தந்த சின்னமே!
உறவான பால சிங்கமே!
மீண்டும் எழுந்து வாராயோ? (வாராய்!)

ஆழம் கொண்ட ஞானியாய்!
அண்ணன் அருகில் தோழனாய்!
உறவில் என்றும் நிலைத்திடும் எண்ணம் நீரே பாலா!
வீரம் பிறக்கும் நாட்டிலும்
ஈழத் தமிழின் ஏட்டிலும்
நித்தம் முகமே பூக்குதே!உறக்கமோ பாலா?
உலவி வந்த சந்தமே!
உறுமி வென்ற தமிழ்ச் சிங்மே!
மீண்டும் பிறந்து வாராயோ?(வாராய்!)

17.12.06

2.
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!! எங்கள் பாலா அண்ணா!
அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)

தணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்துதேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்தஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!
உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!! (பாலா அண்ணா)

16.12.06
தமிழீழ விடுதலைப் பாதையில்,
தமிழின வரலாற்றின் அரசியல்,
வெற்றிப் பயணத்தின் மதிநுட்ப வழிகாட்டி!

தமிழின விடியலின் மதி ஒளிகாட்டி!
உலகத்தமிழினத்தின் உயிராழத்தில்
மாறாத முகமுமாய்,
மங்காத குரலொலியுமாய்
வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள் மதி அகம்காட்டி!

14-12.06.

3.
ஏற்குமோ?
தமிழின உளமது ஏற்குமோ?
மதிமுகமே! மறந்து போகுமோ?
தேசமே தாங்குமோ?
அறிவாலமரமே! பாலாண்ணையே!
மனமெங்கும் குரலொலியே! தமிழ் மனதார மொழியிலையே! - அந்த மதிப் பயண வழியில்லையே! ( ஏற்குமோ)

தலைவனின் அருகினில்
அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின்
மதிநுட்ப வழிகாட்டி!
பேச்சுக் களங்களின் தடை நீக்கி - விடுதலை
வீச்சுக் களங்களில் உணர்வூக்கி
எதிரிக்கு அரசியல் எரிமலையே!
ஓய்ந்துபோனதோ அறிவலையே! (ஏற்குமோ)

மலையென மதியினில்
விடுதலைச் சுடரேற்றி!
உடையினில் பேச்சு
நடையினில் எளிதேற்றி!
உலகத் தமிழின உள்ளத்து உறவாகி - வேதனை
தந்திங்கே போனதெங்கே!
எத்திக்கும் மௌனமாய் ஆனதிங்கே!சாய்ந்துபோனதோ? அறிவுச்சரித்திரமே! (ஏற்குமோ)
14.12.06
.


4.
ஞானக்குயிலே!தேசக்குரலே!!
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!!
எங்கள் பாலா அண்ணா!

அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)த
ணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த
அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்து
தேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்த
ஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!!(பாலா அண்ணா).16.12.06



5.
மாமணியே!
மனித மாணிக்கமே!
தேசத்தின் குரலே!
சர்வதேசத்தில் தமிழர்க்காய் முழங்கிய சங்கே!
உள்ளமெல்லாம் உச்சரிக்கும் அண்ணா பாலா! - நீரே
உயர்வானமிங்கு வந்துதிக்கும் அறிவு நிலா!
உமது பேச்சென்றும் இனிக்கும் பலா!
பாலா அண்ணன் எனும் நாமம்
காலம் போனாலும் போனாலும் மறையாதது.

சகாப்தம் படைத்த சானக்கியரே!
சகா வரம் பெற்ற அறிவொளியே!
வீசும் காற்றுப் போல்! ஒளிக் கீற்றுப் போல்!
என்றும் நிலைத்த நித்தியமே!

மாபெரும் மனித மாணிக்கமே! - தமிழ்
மண்ணில் உதித்த மாமணியே!
மங்காப் புகழ் பூத்த அறிவுச் சுடர்விளக்கே!
தமிழின வானில் அம்புலி!
தரணியில் தத்துவ அரசியல் அறிவுப்புலி!
தலைவன் அருகில் அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின் மதி நுட்ப வழிகாட்டி!
அரசியல் தத்துவமே!
அறிவியல் புத்தகமே!
அன்பெனும் பெட்டகமே!
ஈழமணி நாட்டினிலே தீராத தாகம் கொண்டீர்!
வீரத் தமிழ் தலைவன் அருகில் மாறாது நின்றீர்!
அரசியல் ஞானியே! அறிவு ஏணியே!
தமழர் நம் நெஞ்சிலே நினைவாகி நிலைத்தீரே!


6.
மதிபாலா மறையவில்லை - மனங்களிலே!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

கதிகாலம் அழைத்ததென்பீரோ?
விதியாலம் செய்ததென்பீரோ? மதிஞானியே!
எழுத்து வரிக் காதலனே! - எழுத்துலகில்
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

பேச்சினிலும் பேனா வீச்சினிலும் - உமது
மூச்சினிலும்தத்துவமே! தமிழீழமே!
கண்ணாடி அணிந்தே - நம்முன்னாடி நிற்கின்றீர்
குறுந்தாடி முகவழகே!மலர்ந்தீரே!
மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

வரிப்புலிதான் வீழ்வதில்லை
வரலாறாய் எழுகின்றார்.
தேசத்தின் குரலே! தேசப் புகழே! - நம்
உயிரெல்லாம் முளைக்கின்றீர்!
பிறப்பாகி பிறப்பாகி
புதுப் பிறப்பாகி உயிர்கின்றீர்!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)


'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து.
சு.பா.ஈஸ்வரதாசன் .

சனி, 26 நவம்பர், 2011

காலமது ஈழம் தரும் காண்பீரே!

காலமது ஈழம் தரும் காண்பீரே!

விண்ணெழுந்து விடுதலை தேடிப் புறப்பட்ட வீரர்களே!
மண்ணனைத்து உயிர்தனை துறந்து எம்முள் நுளைந்தீரே!
அண்ணனின் வழியினில் அடிவை்த்து துணிவாய் நடந்தீரே!
கண்ணதில் வைத்து வணக்குகிறோம் மீண்டும் வாரும் மாவீரரே!

எண்ணமதில் எங்கும் எதிலும் உள்ளமதில் வாழ்வபரே!
விண்ணதிரும் ஓர் நாள் விடுதலைத் தீ மூழும் தீரரே!
எண்ணியது ஈடேறும் எமதுள்ளம் என்றும் உமைப்பாடும் வீரரே!
கண்ணெதிரே நடந்தேறும் காலமது ஈழம் தரும் காண்பீரே!

வெள்ளி, 25 நவம்பர், 2011

தமிழர் சூரியத்திசை தலைவன் வாழும் திசை!

                                                          தமிழர் சூரியத்திசை
                                                       தலைவன் வாழும் திசை!
 வல்வை வளர்ந்த சூரியத்திசையே!
எழுதவே.பிரபாகரன் முகவரி தந்தார்! - தமிழர்
உயரவே.பிரபாகரன் புலிக்கொடி தந்தார்!
தமிழர் முகவரி தலைவர் உம் வழி!
தடைகள் எதுவரினும் பணிகள் தொடரந்திடுவோம்.
வாழ்க தமிழ் முகமே!
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
விழி கொண்டெழுகிறோம் - விடுதலை
மொழி கொண்டெழுகிறோம்,

பனியும், காற்றும்
படர்ந்து வரும் எதிரி
நரியின் கூட்டும்
நம்மை என் செய்யும் இங்கே!
விண்வெளியில் பறக்கும்
விழிதிறந்த நீலப் புலி வானேறும்,
விடுதலையின் விடைவரும் காலம்
உலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.
ஒரு வழி
ஒரு தலைக் குடைக்கீழ்
எழுகிறது தமிழீழத்தமிழ்.

பிஞ்சும் கூனும் கிழமும்
நெஞ்சு நிமிர்த்தி
கூடுடைத்து
விழுது கொண்டு
வீதியிறங்கி வேர் தேடி வரும்.
விடுதலை கீதம் கேட்கிறது காதில்
தலைமகன் விடுதலை வரிமுகங்கள்
வரவேற்கும் மொழிகேட்கிறது.
பொங்குதமிழ்எங்கும் தங்கும் பொங்கும்!
அதிலிருந்து எழுகிறது தமிழுயிர்.
வருகிறோம்! வருகிறோம்!
வரலாற்றில் தமிழீழம்
வருகிறோம்! வருகிறோம்!
(களப்பணி தவறியதால் என் கலைப்பணி தொடர்ந்திடுவேன்.)

ஞாயிறு, 20 நவம்பர், 2011

நேர்மைதவறாது பணி தொடர்வேன்.இது உறுதி.

அனைவருக்கும் வணக்கம்!

 நேசத்திற்குரிய அனைவருக்கும் ஒரு விடயம் அறியத்தரவேண்டிய கடமை எனக்குண்டு!
 
இப்போது நேரடியாக((நேரடிக்குரல்)(ஏற்கனவேஒலிப்பதிவு செய்யப்பட்டது ஒலிபரப்பாகலாம்) ) எந்த வானொலிகளிலும் எனது சேவையை வழங்கவில்லை!

 ஏற்கனவே கால நிலமையால் தனியார் மீடியா குரூப் நிறுவனத்தின் ஊடாக இயங்கிவந்த இணைவிலிருந்து விலகும் எங்கள் ஐபிசித்தமிழ் உடன் நானும் விலகுகிறேன்.
 
காலம் வரும்போது ஒலிக்கும்.
 
தயவுசெய்து ஐபிசித்தமிழ் பற்றிய தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். நம்ப வேண்டாம். அத்தோடு மக்களால் நேசிக்கப்படும் ஐபிசித்தமிழ் பெயர் கொண்டு , போலி முகம் காட்ட வேண்டாம். அது என்போன்று ஐபிசித்தமிழை நேசிக்கும் உண்மை உள்ளங்களைப்பாதிக்கும்.
 
உண்மையான துாய உள்ளம் நேசம் கொண்ட பலரது கடின உழைப்பு மற்றும் உயிரிழப்புக்களால் நேயர்களின் , மக்களின் ஆதரவால் உயர்ந்தது ஐபிசித்தமிழ். தமிழ் வளர்க்க வளரத்துடிப்பது.
 
ஐபிசித்தமிழ்  தமிழைக்கொச்சைப்படுத்த, தமிங்கில நிகழ்ச்சிகளுக்கு என்றும் துணைபோகாது.
 
அது எப்போதும் தடம் மாறதது.
அதை யாரும் மக்களை ஏமாற்ற பாவிக்காதீர்கள். அப்படிப்பாவித்தால் காலத்தாய் உங்களை நிச்சயம் தண்டிப்பாள்..
 
நல்லவர்கள் என்று நினைக்க வைத்து பழகி, அன்பு பாராட்டி, உறவுபோல் பழகிவிட்டு எல்லாவற்றுக்கும் ஆலோசனை கேட்பதுபோல் கேட்டு எங்களையும் காரணி ஆக்ககலாம் என உள்நோக்கம் கொண்டு பழகுமனங்களை எப்படி இனம் கான முடியும். பணம் படைத்தவர்கள் என நினைப்பவர்கள் -தனிப்பட்டவர்கள், மக்கள் மீது தங்கள் கருத்துக்களை எங்களைக் கருவியாக்கி கூலிக்கு மாறடிக்க வைக்கலாம் என நினைக்கும் போது என்றும் அதற்கு துணைபோக முடியாது.
 
நான் கடந்து வந்த புலம்பெயர் ஊடக   வாழ்க்கை பல நல்ல கெட்ட அனுபவங்களை மற்றும் சவால்கள், குழிபறிப்புக்கள், நம்பிக்கை துரோகம் ...என விடயங்களை உள்ளடக்கியது!
 
மற்றும்
 
எனது உண்மைப்பணி எனக்கு நல்ல நேயநெஞ்சங்களை காலம் அள்ளித்தந்தது.
என் இப்பயணத்தில் என்றும் என் அன்புள்ளங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன்.
 
ஏற்கனவே நொத்து போயிருக்கும் என் அன்பான  மக்களை குழப்பும் செயல்களில் சதிக்கூட்டுச்சேரும் துரோகக்கும்பல்களுக்கு என்னால்  துணைபோக முடியாது!
 
சத்தியம் செய்து விட்டு அடுத்த கனமே எங்களுக்கு முதுகில் குத்தும் துரோகத்தனம் வல்லமையால் மன்னிக்க முடியாதது.
 
அப்படிப்பட்டவர்களோடு பேச என் மனம் இடம் கொடுக்காது.  நான் மன்னித்தாலும் காலம் இவர்களை மன்னிக்காது தண்டிக்கும்.
 
தமிழ் மொழி - தமிழ்த் தேசப்பற்று நிறை மற்றும்  ஊடகப்பணியாளனாக என்றும்  உலக மற்றும் தமிழ்மக்களுடன் எனது மக்களுக்கான பணி தொடரும்.
 
தற்போதைய முக்கிய காலச்சுழச்சியில் ஏற்பட்டுள்ள நிலமைகள் இந்த நிலைக்கு என்னைத்தள்ளியுள்ளன.  காலம் எனக்கும் என் மக்களுக்கும் நல்ல பதிலைத்தரும். 

என் தாய்மண்மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அதேநேசத்துடன் பாதைமாறாது,இலட்சியம் நோக்கி நேர்மைதவறாது பணி தொடர்வேன்.இது உறுதி.


நேசமுடன்
சு.பா.ஈஸ்வரதாசன்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மிக நீண்ட தசாப்தங்களாக தொடரும் தமிழர் தாயக விடுதலைக்கான பாதையில் அமைதிவழி போராட்ட காலமுதல் பலமிகுவழிபோராட்ட காலம் பின் பலம்மெளனித்திருக்கும் காலம் அதன் தொடர்ச்சியான காலமென தியாகங்களை வழங்கி எங்கள் ஆழ்மனங்களில் என்றும் குடியிருக்கும் தியாகிகள் முதல் மாவீரச் செல்வங்கள் மற்றும் உடன் பிறப்புக்களின் அர்பணிப்புக்கள்தான் இன்றும் எங்கள் தமிழ்பேசும் இனத்தின் முகவரியாகி விடுதலை வேண்டி நிக்கிறது. அவர்கள் முகங்களை அகம் இருத்தி அவர்கள் கொண்ட அதே இலட்சியத்துக்காக நாம் பயணிக்கும் வரலாற்றின் ஒரு சுழற்சியில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் நடக்கின்ற போது காலம் நமைக்கடப்பதனை உணர்கிறோம்.அவரவர் கடமைகளைச உணர்ந்து ,உளப் பூர்வமாக ,மனத்துாய்மையுடன் சரியாகப் புரிவதன் ஊடாக இலக்கை அடைய தடைகள் உடைத்து உள் நிலைக் களைகள் களைந்து, தாயகத்தில் ஏங்கி நிற்கும் எதிர்கால தளிர்களுக்கும் ,உலகெங்கும் பரந்து வேற்று வயல்களில் நாற்றுக்களாக முளைவிடும் எம் எதிர்கால விளைச்சல்களின் விடியலுக்காக , உலக நடப்புக்களின் வடிவங்களுக்கேற்ப உருவங்கள் கொண்டு கொள்கை தவறாது, தொடர்ந்தும் போராடுவோம்.
இது புதுயுக உலகு வாழ்வியல். வேகமான காலச்சுழற்ச்சி. நவீன தொழில் நுட்ப நுன்னியல் சுழல் வேக வளர்ச்சி. இவ் உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்காக என்னவெல்லாம் இழந்தும் இழக்க விருப்பமின்றியும் அத்தோடு காலத்தின் பறிப்பும் வழங்கலுமாக பிறப்பு - வாழ்வு - வாழ்வுக்கான போராட்டம் - உறவு - இறப்பு என சுழலும் உலகச்சக்கரத்தில் மனிதம் - மனிதன்.
தனியே நான் என்று இல்லாமல் குடும்பம் - சமூகம் - நாடு - சர்வதேசம் என பரந்து விரிந்து செல்கிறது. வேகமான ஓய்வற்ற வாழ்வியலில் சிக்கித்தவிக்கும் மனிதனாகிவிட்டான் இக்கால மனிதன். அதனால் உறவியல் பண்பு நிலைகளும் தம் போக்கிலே மாற்று நிலைகளுக்குள் வழிமாறிப்போகும் நிலைகாணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியின் வெற்றியில் உலகு நிகழ்வுகளை இப்போ விரல்களுக்குள் நர்த்தனமாட வைக்கும் வளர்ச்சியின் உச்சப் போக்கில் வளர்கிறது.இந்நிலை எங்கு எதில்தான் போய் முடியுமோ? என ஓர் அச்சமும் ஆட் கொண்ட வண்ணமே உலகு பயணிக்கிறது.
ஒரு இனம் அதன் அடையாளம் எனும் போது தொடர்பியல, பண்பாடு, கலை, கலாச்சாரம், இலக்கியம், மொழி, பரம்பல், பாரம்பரியம், கல்வெட்டு, தொல்பொருள், தொண்மை, தோற்றம், … என ஆழ வேறோடிச்சென்று விளைபொருள் தேடுகிறது.
ஒரு மொழித்தொடர்பு என்பது அத்தியாவசியமாகிறது. அது தனி இன அடையாளத்திற்கு சாட்சியாகிறது. மிக முக்கிய உயிர்த்தன்மை வகிக்கிறது. இன்றைய உலகத தன்மையில் நிலையில் இனஅடையாளம் எனும் கண்ணோட்டமும் அதற்குரிய மிகவேகமான வளர்ச்சிக்கான செயற்பாடும் முக்கியமான மிகமிக ஆழமானதாக அமையவேண்டியது அவசியம் எனக்கொள்ளலாம்.
பிரிவு நிலைப்போக்கு அதிகரித்துத்துச் செல்லும் மனிதப் பண்பியலாகி விரிந்து செல்லுகிறது. காலச்சூழல் அதற்கு காரணங்களாகி கட்டியம் கூறி நிற்கிறது.
சுதந்திரமான கெளரவமான சுய உரிமைகளைக் கொண்ட வாழ்வையே மனிதம் எதிர்பார்த்து வேண்டி நிற்கிறது. இந்த மனிதநேய சிந்தனைகளை யெல்லாம் முன்னர் வேண்டிப் போராடி வெற்றி பெற்று வாழ்கின்ற இனங்கள். அவையே மற்றைய இனங்களை சுரண்டி, அடக்கி, ஆக்கிரமித்து,அழித்துவிட பயங்கரப் பேரலையாய, வல்லாதிக்கமாய், நயவஞ்சக சூழ்ச்சித் திட்டங்களை, குழிகளை ஏற்படுத்தி, பல கூட்டுக்களை உருவாக்கி சிக்கவைத்து, படுத்தாத பாடுகளை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு பாரம்பரிய வரலாற்றுத் தொண்மைமிக்க மனிதப்பிறப்பியல் முன்னோடி இனங்களை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி நிற்கின்றன.

இனம் அதன் அடையாளங்களை கொண்டிருப்பது மிகவும் தேவையானதல்லவா?

அடையாள இழப்பும், அதற்கான பொறிகளுக்குள் வீழ்தலும் ஒரு வித இன அழிவுக்கு துணை போதலே எனலாம். மனித இனமே எத்தனை வகையாகிப் போகிறது. உட்பிரிவுகள் உருவாகி அவை வகை வகை யாகிக்கொண்டே போதலும் ஆபத்தானதுதானே.
எனவே இந்த வல்லாதிக்கங்களை வெற்றி கொண்டு சுதந்திரமான, சுய வாழ்வியலுக்கான சுய போராட்டங்களை வீறுடன் தொடுத்து எந்தவித கருத்தியல் சொல்லாடல்களுக்கும், வல்லாயுத அடக்கு முறைகளுக்கும், சுழற் புயல்களுக்கும், சுனாமிகளுக்கும், பயந்துவிடாமல் மிடுக்குடன் எழுந்து அதன் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.
தமிழர் தாயகபூமி ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு என்பதனை தெளிவுபடுத்தி நிலைநாட்டுதல் அவசியமானது. தமிழ் மக்களின் ஒருமித்த அபிலாசையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து பாடுபடவேண்டும்.
தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் உரிமைகளை உலக அரங்கிற்கு உரிய முறையில் தொடர்ந்தம் எடுத்துக் கூறுவதோடு, கால நீட்சியை தவிர்த்து உடனடிப் பணிகளை புரிவதோடு தொடர்ச்சியான தமிழின விடுதலையை நோக்கிய வேகமான நகர்வை மேற்கொள்வதுடன், தொடர்ந்தும் தமிழர்கள் மீது திட்டமிட்டே மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து அதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்ட வேண்டும்.
எந்த நிலையிலும் கொண்ட இலட்சியத்திலிருந்து விலகாது, சவால்களையும் , அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தொடர்ந்தும் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
தாயகத்திலே தடம்புரண்டு போக விளையும் இளையதலைமுறக்கான சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, அவயவங்களை இழந்த நிற்கும் எம் உறவுகளின் தன்னம்பிக்கை அவயவங்களாக அவர்களுக்கு உதவுவதோடு, கலாச்சாரச் சீர்கேடுகளுக்குள் சிக்கிவிடாது எம் இனத்தை பாதுகாப்பதற்கான உரிய கவணமெடுத்து செயற்படுவதோடு உரிமைநிறை உறவுகளாக செயற்படுவோம்.
அத்தோடு உலகமெங்கும் பரந்து சிதறுண்டு வாழும் எமது இனத்தினையும் வேற்றுலகில் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறைக்கான எதிர்கால விடியலை பெற்றுக்கொடுத்திடவும், இன அடையாளப் பாதுகாப்பிற்கும் தேசிய இன வளரச்சிக்கும் உரமிட்டு சுதந்திர வாழ்வுக்கு பலம் சேர்ப்போம்.
இன்றைய உலக அசுர வேகத்திற்க்கு ஈடுகொடுக்கு மளவில் எமதினத்தின் சகல மட்டத்திலும் பாரிய வளர்ச்சிக்கு திட்டமிட்டு, பல் துறைக்கான வளர்நிலைக்கு களமிட்டு எதிர்காலத்தில் நாமும் சகல நிலைகளிலும் உயர்நிலையில் இருக்க கடுமையாக உழைப்போம்.
ஒரு மையத்துள் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டவரைபை அவற்றுக்கே உரிய விடயக் கணிப்புக்களுடன் செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம். தமிழின விடுதலையை இலக்காக தம்சிரமேற் கொண்டு பணியாற்ற திடசங்கற்பத்துடன் பயணிக்கும் அனைவரையும், வாழ்த்தி வரவேற்று பணிதொடர்வோம்.
இதுவே நம் பணி! விடுதலைபெறும்வரை மனதினில் உறதி கொண்டெழுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சோறு!




கடைசி வரை கண்ணில் நீர்த்தழும்ப வைத்த குறும்படம் இது.
ஒரு வேளைச் சோறு தரும் வேலைக்காக கொதிக்கும் தார்ச் சாலையில் நின்று கொண்டு “சாப்பாடு தயார்” என்ற பலகையினைக் காட்டிக் கொண்டு நிற்கும் அந்த முதியவர் உண்மையிலே உயரத்தில் வைத்துப் போற்றக் கூடியவர்.
மழலையொன்றின் முகம் கண்ட போது அவரிடம் ஏற்பட்ட ஆனந்தமும், அதே மழலை கொடுத்த ஒரு மிட்டாயினைத் தன் மனைவிக்குக் கொடுக்க அதில் பாதியை அவரின் மனைவி திரும்பக் கொடுக்க அற்புதம்.
இவர்களோடு ஒரு பூனைக்குட்டியும் சாப்பாட்டில் பங்கு போடுகின்றது.!
தயாரிப்பாளருக்கு நன்றி

ஞாயிறு, 31 ஜூலை, 2011

தெய்வத்திருமகள் - ஐ ஆம் சாம் ஒருக்கா பாருங்க!






நடிகர் விக்ரம் - நிலாவாக தோன்றிய செல்லத்துக்கும்மற்றும் நடிக குலாமுக்கு பாராட்டுக்கள்.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

.ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்!

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்!
வைகோ இயக்கிய தமிழீழஆவணப்படம்.

தமிழர் அறிய, உலகம் அறிய வேண்டிய பல வரலாற்றுப்பகிர்வுகள்.

திரு.வைகோ அவர்களுக்கு நன்றி.

சனி, 23 ஜூலை, 2011

கறுப்பு ஜீலை!

இருள் நினைவு கொள்!

இனம் மீது நெருப்பு மூட்டினார்!
ஒவ்வொரு கணமும் ஒரு உயிர் முடித்தார்!

திங்கள், 11 ஜூலை, 2011

வெகுவிரைவில்...உச்சிதனை முகர்ந்தால்!

எல்லாக் குழந்தைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப் படுவதில்லை. 13 வயது புனிதவதியை அறிந்தவர்கள், கனத்த மனத்துடன் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத ஆயிரமாயிரம் குழந்தைகளின் அடையாளம் அவள். புனித நதியைப் போல உற்சாகம் பொங்க ஓடிக்கொண்டேயிருந்த புனிதவதியின் வாழ்க்கை, வானவில்லைப் போல கண்ணெதிரில் தொலைந்துபோகும் கதையைக் கண்ணீர் மல்கக் கவிதையாக்கியிருக்கிறது, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம்.
உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் கதை, புனிதவதி என்கிற அழகுத்தேவதையைச் சுற்றியே படர்கிறது.


எனினும் இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை. அவளுடன் சேர்ந்து சிரிப்பதும், அவளுடன் சேர்ந்து அழுவதும்தான் எவருக்கும் சாத்தியம்.

புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான - காற்றுக்கென்ன வேலி - தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம். குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல், மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம். தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட காற்றுக்கென்ன வேலி . யைப் போன்றே, கண்மூடித் தனமாக நசுக்கப் பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை, அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது - உச்சிதனை முகர்ந்தால்.

புனிதவதியாக சிறுமி நீநிகா நடித்துள்ளார். நீநிகா, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி. உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அன்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், அமுதன் என்கிற நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார், புகழேந்தி தங்கராஜ். பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும்மேலும் மெருகேற்றியுள்ளார், இசையமைப்பாளர் டி. இமான்.

ஒளிப்பதிவு: பி. கண்ணன் மற்றும் மணவாளன்.
படத்தொகுப்பு: பி. லெனின்.

தயாரிப்பு: குளோபல் மீடியா ரூ என்டர்டெய்ன்மென்ட் (Global Media & Etertainment as) நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் (Global Media Invest as) இணைத் தயாரிப்பாளர்கள்: ஸ்ரீவன் புஸ்பராஜா, சிறி பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம், றமணன் கந்தையா மற்றும் விஜயசங்கர் அசோகன் ஆகஸ்ட் மாதம் - உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜூலை 31ம் தேதியன்று, உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது. மறுநாள், ஆகஸ்ட் 1ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாக்களில், சத்யராஜ், இமான், சங்கீதா, பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.



நன்றி.

திரு.கார்த்திகேசு சிவத்தம்பி பேராசிரியர் அவர்கட்கு அஞ்சலி வணக்கம்.


தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர், திரு.கார்த்திகேசு சிவத்தம்பி பேராசிரியர் அவர்கட்கு அஞ்சலி வணக்கம்.

வியாழன், 23 ஜூன், 2011

விழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்!?

இன வெறி ஆக்கிரமிப்பினால் அழியும் எம்மினம்...!
விழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்!?
 
 
இன வெறி ஆக்கிரமிப்பினால் அழியும் எம்மினம்...! நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஓர் கால இடைவெளியில் நகர்கின்றது. இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது. போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பபாரத்தை சுமக்க வேண்டிய நிலை உணர்வு ரீதியில் பாதாளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திபாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறக்கிவிட்ட காலத்தின் கொடுமையான மாற்றம்.


.........எம்சமுகத்தின்    ஆன்மாவை  உயிருட்ட ................

........எய்ட்ஸ் நோயிலிருந்து எம் மக்களை மீட்க..............

தமிழினம் போரில் நலிவுற்று வறுமை அங்கவீனம் இவை தாண்டி இனவாத அரசின் கலாசார யுத்தத்தில் கண்ணுக்கு தெரியாமலே அழிவை நெருங்கு கின்றது தென்னாபிரிக்கா சுதந்திரம் பெற்றபோது அம்மக்களில் அனேகர் எய்ட்ஸ் நோயாளிளாக போதைப்பிரியர்களாகவும் காணப்பட்ட துன்பியல் எங்கள் மண்ணிலும்..... இறுக்கமாக கலாசாரத்தை கொண்ட ஈராக் ஆப்கானிஸ்தான் மக்கள்போரில் கணவனை இழந்தும் வறுமையினாலும் பாலியல் பண்டத்தை விற்கும் பரிதாபகதியில் உள்ளனர். அவ்வாறு நமது மண்ணும் மக்களும்... தற்போதைய நிலையும் ...பலவீனமான தன்மையை கொண்டிருப்பதால் எய்ட்ஸ் உக்கிரமாக பாதிக்கும் நிலை காணப்படுகிறது. தற்போதைய அரசின் அதிபரின் சிந்தனை, விபச்சாரத்தையும் சூதாட்டத்தையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நாளாந்தம் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக்கப்படுகின்ற நிலை. அம் மண்ணிலோ விதவை பெண்களை விபச்சாரத்தில் வீழ்த்த இராணுவப்புலனாய்வு பலவழியிலும் நகர்கிறது.


எய்ட்ஸ் நோய் வழமைக்கு மாறான ஒரு விதத்திலேயே பரவுகின்றது. இளவயதினர் அதாவது 17-25 வயது மட்டம் எதேச்சையாகவே இனம் காணப்பட்டுள்ளது. பெண்களை எய்ட்ஸ் நோயாளி ஆக்குவது மொத்த சமுகத்தையும் பாதிக்கும். ஆடைத்தொழிற்சாலை மறுபுறம் விபச்சாரம் என்றே தமிழினத்தை அழிக்க அலைகிறது அரசு.


திட்டமிட்டே எய்ட்ஸ் நோய் பரப்பப்படுகின்றது. அதேவேளை எய்ட்ஸ் விழிப்புணர்வும் சில நிறுவனங்களின் தடையால் அனுமதி வழங்காது தவிர்த்துள்ளதால் நடைபெறாதே உள்ளது.
 
ஒரு சிலர் பாதிப்படைய ஆரம்பித்து விட்டதான உறுதித் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

என்ன செய்யப்போகிறோம்?


பதில் தாருங்கள் எம்மினமே!




‘உயிராலயம்‘

நேசமுடன் ....

சு.பா.ஈஸ்வரதாசன்.

புதன், 15 ஜூன், 2011

எமது மண், மக்கள் பட்ட அவலம்

எமது மண், மக்கள் பட்ட அவலம்....

வெளிப்படுத்திய பிரித்தானிய தொலைக்காட்சி!
11.05 இரவு செவ்வாய் 14 ஜீன் 2011  அன்று

 Channel 4

Jon Snow presents a forensic investigation into the final weeks of the quarter-century-long civil war between the government of Sri Lanka and the secessionist rebels, the Tamil Tigers frreedom fighter. More Series 1 Episode 1 Sri Lanka's Killing Fields
With disturbing and distressing descriptions and film of executions, atrocities and the shelling of civilians
To explore the issues further go to the website at www.channel4.com/srilanka

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170


எந்தன் மண்ணே!

எந்தன் மண்ணே! தாய் மண்ணே!
 உன்னை எண்ணி பாடுகின்றேன்.
 எந்தன் மண்ணே! தாய் மண்ணே!
உன்னை எண்ணி வாடுகின்றேன்.

  ஒருதாயின் பிள்ளைபோலே
மடிமீது வாழ்ந்த காலம்
உருவாகும் நேரம் வா தாய்மண்ணே!

உள்ளத்தில் சோகம் சோகம்
இங்கே நான் பாடும் ராகம்
இன்றேதான் மாறும் காலம்.

  காலங்கள் மாறும் மாறும்.
சோகங்கள் தீரும் தீரும் தாய்மண்ணே!
உருவாகும் எங்கள் ஈழம்.
நமதாகும் உரிமை கீதம். தாய்மண்ணே!
காலங்கள்தான் போனாலும் நேரங்கள்தான் கூடிவரும்
சோகங்கள்தான் தொடர்ந்தாலும் யாகங்கள்தான் தீர்த்துவிடும்.

காயங்கள் ஆறும் ஆறும்.
தாகங்கள் தீரும் தீரும் தாய்மண்ணே!
நிலையாகும் எங்கள் ஈழம்
உலகாழும் உரிமை கீதம் தாய்மண்ணே!
காலங்கள்தான் ஆனாலும் காயங்கள்தான் ஆறிவிடும்.
சோகங்கள்தான் படர்ந்தாலும் யாகங்கள்தான் தீர்த்துவிடும்.

 

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஒற்றுமையுடன் எழுவோம்!

A forensic investigation into the final weeks of the civil war between the government of Sri Lanka and the Tamil Tigers. Features devastating and horrific new video evidence of war crimes. COMING SOON Sri Lanka's Killing Fields - Channel 4 - Tue, 11.05pm http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields
செவ்வாய்க்கிழமை 14.06.2011 அன்று CHANNEL 4 பிரித்தானிய தொலைக்காட்சி வழியாக தமிழீழத் தாயகத்தின் மீது இலங்கை மற்றும் பிராந்திய அதனுடன் கூடிய உலக வல்லரசுகளின் கூட்டுச்சதியுடன் கூடிய இன அழிப்பின் அம்பலம் சில ஆதாரங்களுடன் முழுமையான காணொளி ஒளிபரப்ப படுகிறது. CHANNEL 4 இன் இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்களைப்பகிருங்கள். http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields
அன்னைத் தமிழ் பூமி அழிவுபூமி ஆனதுவோ?
இன்பத் தமிழ் பூமி இடிந்தழிந்து போவதுவோ?
தமிழ்த்தோழா தமிழ்த்தோழா!
விழித்துவிடு விழித்துவிடு!
தரணியெங்கும் தரணியெங்கும்
செழித்துவிடு செழித்துவிடு!

அள்ளிக்குடிக்க நீருமின்றி
உப்பு நீரைபருகுவதோ?
உமிபிடைத்து அரிசிஅள்ளி
உணவுக்கஞ்சி காச்சுவதோ?

பணம்படைத்தோர் புலம்பெயர்ந்தோம்
பாவிமக்கள் படுகின்றார்
உலகவிதி மாற்றிடவே! உலகத் தமிழா ஒன்றுபடு
விலக இனி நேரமில்லை விரைந்து நீயும் ஒன்றுபடு
  உள்ளம் இங்கு துடிக்குதம்மா ஊரை எண்ணி கலங்குதம்மா!

பிஞ்சு முதல் ஆச்சி வரை குடு குடு அப்புவுடன் அன்புத்தங்கை தம்பியரும் சிதைவடைந்து போவதுவோ?   

சனி, 11 ஜூன், 2011

வலியின் வரிகள்.

பல்லவி சரணம்1 சரணம் 2 நிறைவு இசை மற்றும் உணர்வுக்குரல் - திரு.குட்டி (நெதர்லாண்ட்) ஒருங்கிணைப்பு -சு.பா.லோகதாசன் (எனது சின்னண்ணா)

வியாழன், 2 ஜூன், 2011

வணக்கம்!

வாருங்கள்  வரவேற்கிறேன்.

நீங்கள் விரும்புகின்றபோது...
உங்கள் நேரப்பகிர்வுக்கு வணக்கம்.


எனது வாழ்க்கைப் பயணத்தில்
என் ஞாபகங்கள்...
என்னால் பதியப்பட்டவை...
என்னிடம் அன்புள்ளங்கள்  மற்றும் ஏனையோர்  பகிர்ந்தவை...
இன்னும்....

நடந்தவை...
கடந்தவை...

என் சிந்தை வந்தவை...
என்னால் பகிரக்கூடியவை...
அறிந்தவை...
அறியத்துடிப்பவை...

ஒரு உயிரினமாக...
ஒரு அப்பாவி மனிதனாக...
ஒரு மகனாக...
ஒரு உடன்பிறந்தவனாக...
ஒரு நன்பனாக..
ஒரு கணவனாக...
ஒரு அப்பாவாக...
ஒரு உறவினனாக...
ஒரு அறிமுகமில்லாதவனாக...
ஒரு ரசிகனாக...
ஒரு...
ஒரு......



இன்னும் புரிந்ததுபோல் புரியாதவை...

பணிவுடன் பகிர்கிறேன்.


சில என் வாழ்வில் சந்தித்தவை ...
உண்மைப்பகிர்வுகள்...உண்மை மாறாது...
சிலபெயர்கள் வேறு பெயர்களாக...
மற்றும்,
என் எண்ணங்கள், எழுத்தாகியதால்...
உங்களுடன் பகிர்கிறேன்.

வாசித்து செல்லுங்கள்...

கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் 
குறைவிளங்காது
தயவுடன்
அன்புள்ளத்துடன்  சுட்டிக்காட்டுங்கள்.
உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.


நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.

புதன், 1 ஜூன், 2011

உயிர்க்குள் முளைத்தவை..

Wednesday, 18 June 2008

உயிர்குள் முளைத்தவை...

என்னைத் துளைத்து எனக்குள் விதைத்து உயிர்குள் முளைத்தவை...
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள்பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ??? -பாரதியார்
பொது நலத்துக்கு உழைக்கும் அறிஞர்களை தன்னலத்துக்கு உழைப்பவர்கள் விரைவில் வென்று விடுவார்கள். முன்னது - ஆற்றின் ஊற்று நீர் போன்றது. பின்னது - காட்டாற்றில் பெருகி வரும் வெள்ளம் போன்றது.
- -கி.ஆ.பெ.விசுவநாதம்.
----
குறள்
49.காலம் அறிதல்
'ஞாலங் கருதினுங் கைகூடும் - காலம்
கருதி இடத்தாற் செயின் -484.
'காலங் கருதி இருப்பர் - கலங்காது
ஞாலங் கருது பவர்' -485
74. நாடு
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் - ஏமம்
அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து' -738
ஈசன் மொழிகள்

'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'

'எழுத்துயர படைப்பு உயரும்

படைப்புயர சமூகம் உயரும்'

-------
ஒருமுறை..
ஒன்று சொல்வேன்.
ஒரு முறை மலரும் மலர் போல்
மொட்டவிழும் ஒருமுறை பெண்மை.
தொட்டவிழும் ஒருமுறை தாய்மை.
கண்கள் பேசியோ? பேசாமலோ?
காதல் ஒரு முறை
.24.12.02
--------
'எல்லாத் தரப்பினரும்
நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால் உலகே உயர்ந்துவிடும்.'
---------
'பிறப்பின் மகிமை புனிதமானது
என்பதை நிரூபித்திட்ட நன்நாளை நினைத்து
நாமெல்லாம் மகிழ்ந்திருப்போம்.'
-------
அமைதியை நாடும் மனம்
ஆறுதல் தேடும் இடம்
ஏதோ மனிதச் சத்தங்கள் பொறுக்கும்.
23.09.00
---
தவறியவை தவறியவையே!
தடுமாற்றம் என்பது இருந்துவிட்டால்
தவறுதலுக்கு தப்ப முடிவதில்லை.
தப்புதல் என்பது?
தப்பாகாது எனச் சொல்வதற்கு இல்லை.
13.09.00
-----
காதல் மொழி.
சின்ன சின்ன பார்வைகள் போதும்
சிரித்த கண்கள் பூசுதல் போதும்
எந்தன் மனதை திருடிக்கொண்டதுமில்லாமல்
இல்லை என்று பொய்யும் சொல்வது
பெண்மையின் உண்மையோ?
000000000