.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

சனி, 16 மே, 2015

ஆண்மை இழுக்குகளே!
அழிந்துபோகக் கடவ!
-----------------------------------
அம்மாச்சி உன் நிழற்படம் 
பார்த்தபோது....
தொடர்ந்த செய்தியால்
மனம் வெந்தேன்....
என் தாயே!
உன்னை இழந்து நிற்கும்
உறவுகளுக்கு யார் ஆறுதல் சொல்வார்?
மீண்டும் மீண்டும் மீண்டும்
உன் முகப் படம்
பார்க்க முடியவில்லையம்மா!
மனதால் நீ
என் மகளென்றே துடிக்கிறேன்...
எழுதுவதற்கு விருப்பின்றியிருந்தேன்...
ஆனாலும்
மனமுந்தி எழுதுகிறேன்...
என் சொல்வேன்.
மனித வடிவில்
உலவும்...
பிறந்து தவறிய...
பிறப்பால் தவறிய...
தப்பான பிறப்பால்..
காட்டுமிராண்டி மிருகங்கள்... ஓநாய்கள் ?
மனம் நோகுதம்மா!
அண்ணன் ஆட்சியில்
இல்லா நிலை
அனைவருக்கும் புரியும்...
துாண்களும்...
முச்சந்திகளுக்கும்...
இப்போ
புரியும்...
அன்று சுடப்பட்டவைகளும்
மனித வடிவில்
உலவும்...
பிறந்து தவறிய...
பிறப்பால் தவறிய...
தப்பான பிறப்பால்..
காட்டு மிராண்டி மிருகங்களும் ஓநாய்களுமென்றே!
நான்
என்னறிவின் படி
உயிர்க் கொலை
ஏற்காதவன்....
இயற்கையாய்...
விபத்தால்...
விளைதல்
...
முளைத்த செடியே!
புன்னகைத்த புவே!
உடன்பிறவா சோதரியே!
என் மகளைப் போன்றவளே!
சாந்தியடையா ஆத்மமே!
....
......
.......
......
இந்த உலக மண்ணின்
ஆண்மை இழுக்குகளே!
அழிந்துபோகக் கடவ!
---
16.05.15 - ( வித்யா அம்மாச்சிக்கு)

கருத்துகள் இல்லை: