.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

திங்கள், 11 மே, 2015

கமலின்....

கமலின் ‘விஸ்வரூபம்‘
சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம் என அறிந்த நிலையிருந்து...
கமலின் ‘விஸ்வரூபம்‘ தமிழ்த்திரையுலக வளர்ச்சியில், தொழில்நுட்ப போக்கில் பார்க்கக் கூடிய திரைப்படம்..
( உள்ளார்ந்த கருத்துக்கள், கமலின் ஏனைய பார்வைகள் இவைபற்றி நிறைய எழுதலாம்.)
(ஈழத்தமிழர் பற்றிய அவரது நிலைப்பாடு ...... புன்னகை மன்னனில் அவரது குரலில் வரும் சில கருத்துக்கள்...  அடுத்து . தெனாலிராமன், அடுத்து .மன்மதன் அம்பு..  என சில படங்களில்...வரும் நிலைப்பாடுகள்.)
அதற்கும் அப்பால் கலைப்படைப்பாய் பார்க்கும்போது கமல் பாராட்டப்படும் இடத்தில்.
...சகலகலா வல்லவன் திரைப்படம் பாரத்ததற்கும் இதற்குமான வித்தியாசம் ஏராளம்.(காரணம் என் அனுபவத்தில் அப்படம்தான் எனக்கு  கமலின் முதற்படம். அதைப்பார்த்து அந்தப்பாடலுக்கு நான்  ..இளமை இதோ.. நடனமாடிய ஞாபகங்கள். )

ஒவ்வொருவரின் எண்ண வெளிப்பாடுகள்,உள்மன உணர்வுகள், கருத்தியல் வெளிகள், வெவ்வேறானவை என்ற வகையில்தான் ...பல நிகழ்வுகள் அதற்கான எதிர்வலைகள் வருகிறது... அது எல்லா இடத்திலும் உருவாகக் கூடியதே. ஆனால் அவை மேலும் மேலும் அழிவுகளை உருவாக்குவது கவலைக்குரியது. அறிவு வளரச்சியில் ஒருவருடைய அறிவுப்போக்கில் மாறுபடுவது இயல்பே...(நெருப்பு சுடும்...என்பதிலிருந்து..)
 மற்றவர்களை அழித்துவிடாத...அடிமைப்படுத்தாத, கேவலப்படுத்தாத, அதேவேயைில் உள்ளதை உள்ளபடி கூறுதல், நியாயப்பாடுகளை வெளியிடல் என்பது கருத்துரிமைக்குரியது. 
மதிப்புமிகு வெளிப்பாடுகள், உள்நோக்கின்றி வெளிவருதல் வரவேற்கத்தக்கது...
(உதாரணம்... வீதியில் உள்ள கல்லை எடுத்து நன்மை செய்ய நினைத்து எடுத்து எறிந்தாராம் ஒருவர்.எறிந்தவிட்டு அவர் போய்விட்டார்.  ஆனால் அந்தகல்லில் அகப்பட்டு இறந்ததாம் ஒரு தவளை. அது அவருக்குத் தெரியாமலே..)

கருத்துகள் இல்லை: