.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

சனி, 26 நவம்பர், 2011

காலமது ஈழம் தரும் காண்பீரே!

காலமது ஈழம் தரும் காண்பீரே!

விண்ணெழுந்து விடுதலை தேடிப் புறப்பட்ட வீரர்களே!
மண்ணனைத்து உயிர்தனை துறந்து எம்முள் நுளைந்தீரே!
அண்ணனின் வழியினில் அடிவை்த்து துணிவாய் நடந்தீரே!
கண்ணதில் வைத்து வணக்குகிறோம் மீண்டும் வாரும் மாவீரரே!

எண்ணமதில் எங்கும் எதிலும் உள்ளமதில் வாழ்வபரே!
விண்ணதிரும் ஓர் நாள் விடுதலைத் தீ மூழும் தீரரே!
எண்ணியது ஈடேறும் எமதுள்ளம் என்றும் உமைப்பாடும் வீரரே!
கண்ணெதிரே நடந்தேறும் காலமது ஈழம் தரும் காண்பீரே!

வெள்ளி, 25 நவம்பர், 2011

தமிழர் சூரியத்திசை தலைவன் வாழும் திசை!

                                                          தமிழர் சூரியத்திசை
                                                       தலைவன் வாழும் திசை!
 வல்வை வளர்ந்த சூரியத்திசையே!
எழுதவே.பிரபாகரன் முகவரி தந்தார்! - தமிழர்
உயரவே.பிரபாகரன் புலிக்கொடி தந்தார்!
தமிழர் முகவரி தலைவர் உம் வழி!
தடைகள் எதுவரினும் பணிகள் தொடரந்திடுவோம்.
வாழ்க தமிழ் முகமே!
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
விழி கொண்டெழுகிறோம் - விடுதலை
மொழி கொண்டெழுகிறோம்,

பனியும், காற்றும்
படர்ந்து வரும் எதிரி
நரியின் கூட்டும்
நம்மை என் செய்யும் இங்கே!
விண்வெளியில் பறக்கும்
விழிதிறந்த நீலப் புலி வானேறும்,
விடுதலையின் விடைவரும் காலம்
உலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.
ஒரு வழி
ஒரு தலைக் குடைக்கீழ்
எழுகிறது தமிழீழத்தமிழ்.

பிஞ்சும் கூனும் கிழமும்
நெஞ்சு நிமிர்த்தி
கூடுடைத்து
விழுது கொண்டு
வீதியிறங்கி வேர் தேடி வரும்.
விடுதலை கீதம் கேட்கிறது காதில்
தலைமகன் விடுதலை வரிமுகங்கள்
வரவேற்கும் மொழிகேட்கிறது.
பொங்குதமிழ்எங்கும் தங்கும் பொங்கும்!
அதிலிருந்து எழுகிறது தமிழுயிர்.
வருகிறோம்! வருகிறோம்!
வரலாற்றில் தமிழீழம்
வருகிறோம்! வருகிறோம்!
(களப்பணி தவறியதால் என் கலைப்பணி தொடர்ந்திடுவேன்.)

ஞாயிறு, 20 நவம்பர், 2011

நேர்மைதவறாது பணி தொடர்வேன்.இது உறுதி.

அனைவருக்கும் வணக்கம்!

 நேசத்திற்குரிய அனைவருக்கும் ஒரு விடயம் அறியத்தரவேண்டிய கடமை எனக்குண்டு!
 
இப்போது நேரடியாக((நேரடிக்குரல்)(ஏற்கனவேஒலிப்பதிவு செய்யப்பட்டது ஒலிபரப்பாகலாம்) ) எந்த வானொலிகளிலும் எனது சேவையை வழங்கவில்லை!

 ஏற்கனவே கால நிலமையால் தனியார் மீடியா குரூப் நிறுவனத்தின் ஊடாக இயங்கிவந்த இணைவிலிருந்து விலகும் எங்கள் ஐபிசித்தமிழ் உடன் நானும் விலகுகிறேன்.
 
காலம் வரும்போது ஒலிக்கும்.
 
தயவுசெய்து ஐபிசித்தமிழ் பற்றிய தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். நம்ப வேண்டாம். அத்தோடு மக்களால் நேசிக்கப்படும் ஐபிசித்தமிழ் பெயர் கொண்டு , போலி முகம் காட்ட வேண்டாம். அது என்போன்று ஐபிசித்தமிழை நேசிக்கும் உண்மை உள்ளங்களைப்பாதிக்கும்.
 
உண்மையான துாய உள்ளம் நேசம் கொண்ட பலரது கடின உழைப்பு மற்றும் உயிரிழப்புக்களால் நேயர்களின் , மக்களின் ஆதரவால் உயர்ந்தது ஐபிசித்தமிழ். தமிழ் வளர்க்க வளரத்துடிப்பது.
 
ஐபிசித்தமிழ்  தமிழைக்கொச்சைப்படுத்த, தமிங்கில நிகழ்ச்சிகளுக்கு என்றும் துணைபோகாது.
 
அது எப்போதும் தடம் மாறதது.
அதை யாரும் மக்களை ஏமாற்ற பாவிக்காதீர்கள். அப்படிப்பாவித்தால் காலத்தாய் உங்களை நிச்சயம் தண்டிப்பாள்..
 
நல்லவர்கள் என்று நினைக்க வைத்து பழகி, அன்பு பாராட்டி, உறவுபோல் பழகிவிட்டு எல்லாவற்றுக்கும் ஆலோசனை கேட்பதுபோல் கேட்டு எங்களையும் காரணி ஆக்ககலாம் என உள்நோக்கம் கொண்டு பழகுமனங்களை எப்படி இனம் கான முடியும். பணம் படைத்தவர்கள் என நினைப்பவர்கள் -தனிப்பட்டவர்கள், மக்கள் மீது தங்கள் கருத்துக்களை எங்களைக் கருவியாக்கி கூலிக்கு மாறடிக்க வைக்கலாம் என நினைக்கும் போது என்றும் அதற்கு துணைபோக முடியாது.
 
நான் கடந்து வந்த புலம்பெயர் ஊடக   வாழ்க்கை பல நல்ல கெட்ட அனுபவங்களை மற்றும் சவால்கள், குழிபறிப்புக்கள், நம்பிக்கை துரோகம் ...என விடயங்களை உள்ளடக்கியது!
 
மற்றும்
 
எனது உண்மைப்பணி எனக்கு நல்ல நேயநெஞ்சங்களை காலம் அள்ளித்தந்தது.
என் இப்பயணத்தில் என்றும் என் அன்புள்ளங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன்.
 
ஏற்கனவே நொத்து போயிருக்கும் என் அன்பான  மக்களை குழப்பும் செயல்களில் சதிக்கூட்டுச்சேரும் துரோகக்கும்பல்களுக்கு என்னால்  துணைபோக முடியாது!
 
சத்தியம் செய்து விட்டு அடுத்த கனமே எங்களுக்கு முதுகில் குத்தும் துரோகத்தனம் வல்லமையால் மன்னிக்க முடியாதது.
 
அப்படிப்பட்டவர்களோடு பேச என் மனம் இடம் கொடுக்காது.  நான் மன்னித்தாலும் காலம் இவர்களை மன்னிக்காது தண்டிக்கும்.
 
தமிழ் மொழி - தமிழ்த் தேசப்பற்று நிறை மற்றும்  ஊடகப்பணியாளனாக என்றும்  உலக மற்றும் தமிழ்மக்களுடன் எனது மக்களுக்கான பணி தொடரும்.
 
தற்போதைய முக்கிய காலச்சுழச்சியில் ஏற்பட்டுள்ள நிலமைகள் இந்த நிலைக்கு என்னைத்தள்ளியுள்ளன.  காலம் எனக்கும் என் மக்களுக்கும் நல்ல பதிலைத்தரும். 

என் தாய்மண்மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அதேநேசத்துடன் பாதைமாறாது,இலட்சியம் நோக்கி நேர்மைதவறாது பணி தொடர்வேன்.இது உறுதி.


நேசமுடன்
சு.பா.ஈஸ்வரதாசன்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மிக நீண்ட தசாப்தங்களாக தொடரும் தமிழர் தாயக விடுதலைக்கான பாதையில் அமைதிவழி போராட்ட காலமுதல் பலமிகுவழிபோராட்ட காலம் பின் பலம்மெளனித்திருக்கும் காலம் அதன் தொடர்ச்சியான காலமென தியாகங்களை வழங்கி எங்கள் ஆழ்மனங்களில் என்றும் குடியிருக்கும் தியாகிகள் முதல் மாவீரச் செல்வங்கள் மற்றும் உடன் பிறப்புக்களின் அர்பணிப்புக்கள்தான் இன்றும் எங்கள் தமிழ்பேசும் இனத்தின் முகவரியாகி விடுதலை வேண்டி நிக்கிறது. அவர்கள் முகங்களை அகம் இருத்தி அவர்கள் கொண்ட அதே இலட்சியத்துக்காக நாம் பயணிக்கும் வரலாற்றின் ஒரு சுழற்சியில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் நடக்கின்ற போது காலம் நமைக்கடப்பதனை உணர்கிறோம்.அவரவர் கடமைகளைச உணர்ந்து ,உளப் பூர்வமாக ,மனத்துாய்மையுடன் சரியாகப் புரிவதன் ஊடாக இலக்கை அடைய தடைகள் உடைத்து உள் நிலைக் களைகள் களைந்து, தாயகத்தில் ஏங்கி நிற்கும் எதிர்கால தளிர்களுக்கும் ,உலகெங்கும் பரந்து வேற்று வயல்களில் நாற்றுக்களாக முளைவிடும் எம் எதிர்கால விளைச்சல்களின் விடியலுக்காக , உலக நடப்புக்களின் வடிவங்களுக்கேற்ப உருவங்கள் கொண்டு கொள்கை தவறாது, தொடர்ந்தும் போராடுவோம்.
இது புதுயுக உலகு வாழ்வியல். வேகமான காலச்சுழற்ச்சி. நவீன தொழில் நுட்ப நுன்னியல் சுழல் வேக வளர்ச்சி. இவ் உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்காக என்னவெல்லாம் இழந்தும் இழக்க விருப்பமின்றியும் அத்தோடு காலத்தின் பறிப்பும் வழங்கலுமாக பிறப்பு - வாழ்வு - வாழ்வுக்கான போராட்டம் - உறவு - இறப்பு என சுழலும் உலகச்சக்கரத்தில் மனிதம் - மனிதன்.
தனியே நான் என்று இல்லாமல் குடும்பம் - சமூகம் - நாடு - சர்வதேசம் என பரந்து விரிந்து செல்கிறது. வேகமான ஓய்வற்ற வாழ்வியலில் சிக்கித்தவிக்கும் மனிதனாகிவிட்டான் இக்கால மனிதன். அதனால் உறவியல் பண்பு நிலைகளும் தம் போக்கிலே மாற்று நிலைகளுக்குள் வழிமாறிப்போகும் நிலைகாணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியின் வெற்றியில் உலகு நிகழ்வுகளை இப்போ விரல்களுக்குள் நர்த்தனமாட வைக்கும் வளர்ச்சியின் உச்சப் போக்கில் வளர்கிறது.இந்நிலை எங்கு எதில்தான் போய் முடியுமோ? என ஓர் அச்சமும் ஆட் கொண்ட வண்ணமே உலகு பயணிக்கிறது.
ஒரு இனம் அதன் அடையாளம் எனும் போது தொடர்பியல, பண்பாடு, கலை, கலாச்சாரம், இலக்கியம், மொழி, பரம்பல், பாரம்பரியம், கல்வெட்டு, தொல்பொருள், தொண்மை, தோற்றம், … என ஆழ வேறோடிச்சென்று விளைபொருள் தேடுகிறது.
ஒரு மொழித்தொடர்பு என்பது அத்தியாவசியமாகிறது. அது தனி இன அடையாளத்திற்கு சாட்சியாகிறது. மிக முக்கிய உயிர்த்தன்மை வகிக்கிறது. இன்றைய உலகத தன்மையில் நிலையில் இனஅடையாளம் எனும் கண்ணோட்டமும் அதற்குரிய மிகவேகமான வளர்ச்சிக்கான செயற்பாடும் முக்கியமான மிகமிக ஆழமானதாக அமையவேண்டியது அவசியம் எனக்கொள்ளலாம்.
பிரிவு நிலைப்போக்கு அதிகரித்துத்துச் செல்லும் மனிதப் பண்பியலாகி விரிந்து செல்லுகிறது. காலச்சூழல் அதற்கு காரணங்களாகி கட்டியம் கூறி நிற்கிறது.
சுதந்திரமான கெளரவமான சுய உரிமைகளைக் கொண்ட வாழ்வையே மனிதம் எதிர்பார்த்து வேண்டி நிற்கிறது. இந்த மனிதநேய சிந்தனைகளை யெல்லாம் முன்னர் வேண்டிப் போராடி வெற்றி பெற்று வாழ்கின்ற இனங்கள். அவையே மற்றைய இனங்களை சுரண்டி, அடக்கி, ஆக்கிரமித்து,அழித்துவிட பயங்கரப் பேரலையாய, வல்லாதிக்கமாய், நயவஞ்சக சூழ்ச்சித் திட்டங்களை, குழிகளை ஏற்படுத்தி, பல கூட்டுக்களை உருவாக்கி சிக்கவைத்து, படுத்தாத பாடுகளை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு பாரம்பரிய வரலாற்றுத் தொண்மைமிக்க மனிதப்பிறப்பியல் முன்னோடி இனங்களை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி நிற்கின்றன.

இனம் அதன் அடையாளங்களை கொண்டிருப்பது மிகவும் தேவையானதல்லவா?

அடையாள இழப்பும், அதற்கான பொறிகளுக்குள் வீழ்தலும் ஒரு வித இன அழிவுக்கு துணை போதலே எனலாம். மனித இனமே எத்தனை வகையாகிப் போகிறது. உட்பிரிவுகள் உருவாகி அவை வகை வகை யாகிக்கொண்டே போதலும் ஆபத்தானதுதானே.
எனவே இந்த வல்லாதிக்கங்களை வெற்றி கொண்டு சுதந்திரமான, சுய வாழ்வியலுக்கான சுய போராட்டங்களை வீறுடன் தொடுத்து எந்தவித கருத்தியல் சொல்லாடல்களுக்கும், வல்லாயுத அடக்கு முறைகளுக்கும், சுழற் புயல்களுக்கும், சுனாமிகளுக்கும், பயந்துவிடாமல் மிடுக்குடன் எழுந்து அதன் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.
தமிழர் தாயகபூமி ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு என்பதனை தெளிவுபடுத்தி நிலைநாட்டுதல் அவசியமானது. தமிழ் மக்களின் ஒருமித்த அபிலாசையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து பாடுபடவேண்டும்.
தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் உரிமைகளை உலக அரங்கிற்கு உரிய முறையில் தொடர்ந்தம் எடுத்துக் கூறுவதோடு, கால நீட்சியை தவிர்த்து உடனடிப் பணிகளை புரிவதோடு தொடர்ச்சியான தமிழின விடுதலையை நோக்கிய வேகமான நகர்வை மேற்கொள்வதுடன், தொடர்ந்தும் தமிழர்கள் மீது திட்டமிட்டே மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து அதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்ட வேண்டும்.
எந்த நிலையிலும் கொண்ட இலட்சியத்திலிருந்து விலகாது, சவால்களையும் , அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தொடர்ந்தும் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
தாயகத்திலே தடம்புரண்டு போக விளையும் இளையதலைமுறக்கான சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, அவயவங்களை இழந்த நிற்கும் எம் உறவுகளின் தன்னம்பிக்கை அவயவங்களாக அவர்களுக்கு உதவுவதோடு, கலாச்சாரச் சீர்கேடுகளுக்குள் சிக்கிவிடாது எம் இனத்தை பாதுகாப்பதற்கான உரிய கவணமெடுத்து செயற்படுவதோடு உரிமைநிறை உறவுகளாக செயற்படுவோம்.
அத்தோடு உலகமெங்கும் பரந்து சிதறுண்டு வாழும் எமது இனத்தினையும் வேற்றுலகில் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறைக்கான எதிர்கால விடியலை பெற்றுக்கொடுத்திடவும், இன அடையாளப் பாதுகாப்பிற்கும் தேசிய இன வளரச்சிக்கும் உரமிட்டு சுதந்திர வாழ்வுக்கு பலம் சேர்ப்போம்.
இன்றைய உலக அசுர வேகத்திற்க்கு ஈடுகொடுக்கு மளவில் எமதினத்தின் சகல மட்டத்திலும் பாரிய வளர்ச்சிக்கு திட்டமிட்டு, பல் துறைக்கான வளர்நிலைக்கு களமிட்டு எதிர்காலத்தில் நாமும் சகல நிலைகளிலும் உயர்நிலையில் இருக்க கடுமையாக உழைப்போம்.
ஒரு மையத்துள் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டவரைபை அவற்றுக்கே உரிய விடயக் கணிப்புக்களுடன் செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம். தமிழின விடுதலையை இலக்காக தம்சிரமேற் கொண்டு பணியாற்ற திடசங்கற்பத்துடன் பயணிக்கும் அனைவரையும், வாழ்த்தி வரவேற்று பணிதொடர்வோம்.
இதுவே நம் பணி! விடுதலைபெறும்வரை மனதினில் உறதி கொண்டெழுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.