.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

புதன், 15 ஜூன், 2011

எந்தன் மண்ணே!

எந்தன் மண்ணே! தாய் மண்ணே!
 உன்னை எண்ணி பாடுகின்றேன்.
 எந்தன் மண்ணே! தாய் மண்ணே!
உன்னை எண்ணி வாடுகின்றேன்.

  ஒருதாயின் பிள்ளைபோலே
மடிமீது வாழ்ந்த காலம்
உருவாகும் நேரம் வா தாய்மண்ணே!

உள்ளத்தில் சோகம் சோகம்
இங்கே நான் பாடும் ராகம்
இன்றேதான் மாறும் காலம்.

  காலங்கள் மாறும் மாறும்.
சோகங்கள் தீரும் தீரும் தாய்மண்ணே!
உருவாகும் எங்கள் ஈழம்.
நமதாகும் உரிமை கீதம். தாய்மண்ணே!
காலங்கள்தான் போனாலும் நேரங்கள்தான் கூடிவரும்
சோகங்கள்தான் தொடர்ந்தாலும் யாகங்கள்தான் தீர்த்துவிடும்.

காயங்கள் ஆறும் ஆறும்.
தாகங்கள் தீரும் தீரும் தாய்மண்ணே!
நிலையாகும் எங்கள் ஈழம்
உலகாழும் உரிமை கீதம் தாய்மண்ணே!
காலங்கள்தான் ஆனாலும் காயங்கள்தான் ஆறிவிடும்.
சோகங்கள்தான் படர்ந்தாலும் யாகங்கள்தான் தீர்த்துவிடும்.

 

கருத்துகள் இல்லை: