.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

திங்கள், 11 மே, 2015

உரிமைக் கவியின் குரலெங்கே?

                                                               உரிமைக் கவியின் குரலெங்கே?



வெள்ளை நிற முடியழகன்,
வெத்தலைச் சப்பலின் சுவைஞனவன்!
ஈழக் குரலின் கவிஞனவன்!
கானவில்லை கானவில்லை கவலையிலவன்! 


அன்றொருநாள் கல்யாண வீடொன்று
போனேன் நான்!
அங்கு வந்தவர் பலர்!
பாலாண்ணன், அன்ரி, அவர்களுடன் இவர்!


சிகரங்களாயினும்அருகே போவதில்லை
அது என் பழக்கமாம்.
ஆனால் கண்படு தூரமாயினும் 
கதைக்க எத்துவதில்லை!


இன்றும் நினைவிருக்கு ....

இரும்பறையண்ணனின்
இருமணவிழா!!
இரும்பறை இன்னும்
இந்தியச் சுவர்சுழ்
 இருட்டறையில்...??
இதுவேறகதை!

புதுமைதந்த புதுவை
இரத்தினமின்னும் மின்னவில்லை!
மின்னலாய் மறை(த்)ந்த கதை
யாருக்குத் தெரியும்?

ஊரை உலகறிய வைத்தான்!
உலைக்களம் கவிக்களம் வைத்தான்!
உலகைக் கூவியே அழைத்தவன்
உரிமைக் கவியின் குரலெங்கே?

பூவரசும் புலினிக்குஞ்சும்
தேடுதங்கே!
புதுவைக் கவியரசன் போனதெங்கே!
கத்தியழைத்தும் காணவில்லை
நாவரண்டு போனதிங்கே!

பொங் தமிழ் குரலெடுத்து
பொங்கவிட்டாய்! -அகில
மெங்கு மதிலால் தங்கவிட்டாய்
ஏங்க விட்டே - எமை
யேனோ தவிக்கவிட்டாய்!

ஐய!
வா ஐய!
உன் கவி தா ஐய!
 

கருத்துகள் இல்லை: