.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

திங்கள், 11 மே, 2015

காலம் வரும்போது ஒலிக்கும்!




என் உயிரினும் மேலான
என் தமிழன்னையை, வல்லமையை வணங்கி
உலகத்தமிழின முகவரியின் சிகரம்,
மண்ணின் மாணிக்கங்கள் அனைவரையும் நினைந்து
காலத்தாய்க்கு மகிழ்வு தெரிவித்து
அன்புள்ளங்கள் அனைவரையும்
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்
வானலைகளில் அதே உரிமையுடன்சந்திக்கும் மகிழ்வுடன்

நேசமுடன் ஈஸ்வரதாசன்.

வணக்கம் எம் தமிழ் அன்புள்ளங்களே!

காலம் வரும்போது ஒலிக்கும் என்று கூறியதன்படி

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்,

உங்கள் அபிமானம் பெற்ற ஊடகவியலாளர்கள், தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், ஒலிபரப்பாளர்கள் துறைசார் கலைஞர்கள் ,படைப்பாளிகள்
அனைவiரையும் இணைத்து, இணைந்து
இலக்கு நோக்கிய பாதையில் பயணிக்கும் தொடர் பயணம் உறுதியாக ஆரம்பம்.

எதிர்காலத் தலைமுறையினருக்கான, வழியமைத்து மொழி,கலை, கலாச்சார மற்றும தொழில்நுட்ப வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் பயணம் தொடர்கிறது.

காலச்சுழற்சியில் பல ,இன்னல்கள்,பல இழப்புக்கள்,அனைத்தையும் கடந்து உறுதியுடன் நம்பிக்கையுடன் காலத்தாயின் கைத்தாங்கலில் கம்பீரமாக ஒலிக்கும்

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்.

ஆரம்பம் முதல் இன்றுவரை எம்முடன் உளமாரப் பயணிக்கும் நேயர்கள், வர்த்தகப்பெருந்தகைகள், அன்புள்ளங்கள் அனைவரதும் கைகளை ,இறுகப் பற்றி நிற்கிறோம்.

ஐபிசி தமிழ் அன்னை மீண்டும் எங்கள் கைகளில்.

வளர்போம் , பாதுகாப்போம்.

முன்னரைவிட அதிகபலமான ஆதரவினை எதிர்பார்த்து ,இணைகிறோம்.

இடையூறுகளைத் தவிர்த்து இணையும் கைகளையே எதிர்பார்க்கிறோம்.

எமக்கான தேவைகள் பலவே!

அது உங்கள் பலமே!

எதை எதிர்பார்த்தோமோ அதை காலத்தாய் எம்மிடம் தந்துள்ளாள்.

தாகமாக எதைக்கொண்டுள்ளோமோ அதற்காக அயராது பணி தொடர்வோம். என உறுதியெடுப்போம்.

உழைப்போம் உறுதிகொள்வோம்.

நேசமுடன்...
10.02.14

கருத்துகள் இல்லை: